tamilnadu

img

வாக்கு எண்ணும் மையத்தில் காங்கிரஸ் தலைவர் மரணம்

போபால்:
மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர் ரத்தன் சிங் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்ட காங்கிரஸ் தலைவரான ரத்தன் சிங் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குநிலவரம் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக இருந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

போபால் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் காங்கிரஸ் பிரதிநிதியாக ரத்தன் சிங் காலை முதலே வாக்குநிலவரத்தைக் கண்காணித்து வந்துள்ளார். போபால் தொகுதியில் பாஜகவின் பிரக்யா சிங் தாகூரை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங் போட்டியிட்டார். திக் விஜய சிங்கை விட 50,000க்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று பிரக்யா சிங் முன்னிலை பெற்று, பின்னர் வெற்றி பெற்றார்.

;